ஆரம்ப கட்ட கடைப்பெருங்குடல் புற்றுநோய் கண்டறிதல்/ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு)
ஸ்கிரீனிங்
அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் போன்றதொரு நோயை கண்டறிவதற்காக சோதனைகள் மற்றும் பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன
ஆரம்ப கட்ட கண்டறிதல்
சாதாரணமாக நிகழ்ந்திருப்பதைக் காட்டிலும் முன்கூட்டியே கடைப்பெருங்குடல் புற்றுநோயை நோய்க்குறி அறிவதற்கு வகைசெய்யும் ஓர் அணுகுமுறை.
கடைப்பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில்
கண்டறிய முடியுமா?
வழக்கமான ஸ்கிரீனிங் (நோய்ப்பாதிப்பு ஆய்வு) மூலம் பல சந்தர்ப்பங்களில் கடைப்பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிடலாம்; அந்நிலையில், அதை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
பல சந்தர்ப்பங்களில், ஸ்கிரீனிங் (நோய்ப்பாதிப்பு ஆய்வு) நடைமுறையாலும் கடைப்பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் தடுத்துவிட முடியும்.
இதற்குக் காரணம், சில நீர்ச்சதைகள் அல்லது வளர்ச்சிகள் புற்றுக்கட்டிகளாக மாறுவதற்கு முன்னர் அவற்றைக் கண்டறிந்து அகற்றிவிட முடியும்.
கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங் (நோய்ப்பாதிப்பு
ஆய்வு) என்றால் என்ன?
கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங் (நோய்ப்பாதிப்பு ஆய்வு) என்பது, புற்றுக்கட்டி அல்லது புற்றுக்கட்டியாக மாறக்கூடும் வளர்ச்சிகளின் (நீர்ச்சதைகள்) அடையாளங்கள் உள்ளனவா என முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலை மருத்துவர்கள் சோதிக்கும் நடைமுறையாகும்.
அறிகுறிகள் எதுவும் இல்லாத மற்றும் புற்றுநோய் உள்ளதாக எண்ணுவதற்குக் காரணம் எதுவும் இல்லாத நபர்களுக்கு இது மேற்கொள்ளப்படுகிறது.
நீர்ச்சதைகள் புற்றுக்கட்டிகளாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து அகற்றுவது, அல்லது புற்றுக்கட்டி வளர்வதற்கு, பரவுவதற்கு, அல்லது பிரச்சனைகளை உண்டாக்குவதற்கு முன்பு ஆரம்ப கட்டத்திலேயே அதைக் கண்டறிவதுதான் இதன்
குறிக்கோளாகும்.
கடைப்பெருங்குடல் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்
(நோய்ப்பாதிப்பு ஆய்வு) பரிசோதனைகள்
கடைப்பெருங்குடல் புற்றுநோய் குறித்து ஸ்கிரீனிங் (நோய்ப்பாதிப்பு ஆய்வு) செய்வதற்கு பல்வேறு பரிசோதனைகள் உள்ளன.
இந்தப் பரிசோதனைகளை 2 பெரிய குழுக்களாக பிரிக்கலாம்:
கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள் மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டையும் கண்டறியும் பரிசோதனைகள்
பிரதானமாக புற்றுநோயை மட்டுமே கண்டறியும் பரிசோதனைகள்
கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள் மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டையும் கண்டறியும் பரிசோதனைகள்
இந்தப் பரிசோதனைகளில், ஏதேனும் இயல்பற்ற பகுதிகளை கண்டறிவதற்காக முன்பெருங்குடலின் அமைப்பே கவனிக்கப்படுகிறது.
இது மலக்குடலுக்குள் ஒரு ஸ்கோப் (நோக்குக் கருவி) நுழைப்பது மூலம் அல்லது சிறப்புப் படமெடுத்தல் (எக்ஸ்-ரே) பரிசோதனைகள் மூலம் செய்யப்படுகிறது.
புற்றுத்தன்மை அடையும் முன்பு கண்டறியப்பட்ட நீர்ச்சதைகளை நீக்கிவிடமுடியும்; எனவே இந்தப் பரிசோதனைகளால் கடைப்பெருங்குடல் புற்றுநோயை தடுக்கலாம்.
கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள் மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டையும் கண்டறியும் பரிசோதனைகள்
·ப்லெக்சிபில் சிக்மாய்டோஸ்கோபி
கொலோனோஸ்கோபி
டபுள்-காண்ட்ராஸ்ட் (இரட்டை வேற்றுமை) பேரியம் இனீமா
சிடீ கொலோனோகிரா·பி (நிழல் கொலோனோஸ்கோபி)
·ப்லெக்சிபில் சிக்மாய்டோஸ்கோபி
-சிக்மாய்டோஸ்கோப் மலக்குடல் வழியாக சிக்மாய்டு (கீழ்ப்புற) முன்பெருங்குடல் உள்ளே நுழைக்கப்படுகிறது.
-சிக்மாய்டோஸ்கோப் என்பது, ஒரு விளக்கு மற்றும் பார்வைக்கான ஒரு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மெல்லிய, குழல்-போன்ற உபகரணமாகும்.
-அதில், நீர்ச்சதைகள் அல்லது திசு மாதிரிகளை நீக்கியெடுப்பதற்கான ஒரு கருவியும் இருக்கலாம்; புற்றுநோய் அடையாளங்கள் உள்ளனவா என அறிவதற்காக இந்த மாதிரிகள் ஒரு நுண்ணோக்கி வழியாகச் சோதிக்கப்படும்.
-கொலோனோஸ்கோப் மலக்குடல் வழியாக முன்பெருங்குடலுக்குள் நுழைக்கப்படுகிறது.
-கொலோனோஸ்கோப் என்பது, ஒரு விளக்கு மற்றும் பார்வைக்கான ஒரு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மெல்லிய, குழல்-போன்ற உபகரணமாகும்.
-அதில், நீர்ச்சதைகள் அல்லது திசு மாதிரிகளை நீக்கியெடுப்பதற்கான ஒரு கருவியும் இருக்கலாம்; புற்றுநோய் அடையாளங்கள் உள்ளனவா என அறிவதற்காக இந்த மாதிரிகள் ஒரு நுண்ணோக்கி வழியாகச் சோதிக்கப்படும்.
டபுள்-காண்ட்ராஸ்ட் (இரட்டை வேற்றுமை) பேரியம் இனீமா
-கீழ்ப்புற இரைப்பைக் குடலிய தடத்தை காட்சிப்படுத்தும் ஓர் எக்ஸ்-ரே படங்களின் வரிசை.
-பேரியம் (வெள்ளிநிற உலோகச் சேர்மம்) அடங்கிய ஒரு திரவம் மலக்குடலுக்குள் செலுத்தப்படுகிறது.
-பேரியம் இரைப்பைக் குடலிய தடத்தில் மேல்பூச்சு போல் படர்ந்துகொண்ட பின், ≤க்ஸ்- ரே படங்கள் எடுக்கப்படுகின்றன.
-இந்த நடைமுறை ஒரு லோவர் ஜிஐ சீரீஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
சிடீ கொலோனோகிரா·பி (நிழல் கொலோனோஸ்கோபி)
முன்பெருங்குடல் படங்களின் ஒரு வரிசையை உருவாக்குவதற்காக கம்ப்யூட்டட் டோ மோகிரா·பி எனப்படும் ஓர் எக்ஸ்-ரே படங்களின் வரிசையை பயன்படுத்தும் நடைமுறை.
பிறகு ஒரு கணினி இந்தப் படங்களை ஒன்றுசேர்த்து விலாவரியான பிம்பங்களை உருவாக்குகிறது; இவை, நீர்ச்சதைகளையும் முன்பெருங்குடலின் உட்புற மேற்பரப்பில் வழக்கமற்றதாகத் தோன்றும் வேறு எதனையும் காட்டலாம்.
பிரதானமாக புற்றுநோயை மட்டுமே கண்டறியும்
பரிசோதனைகள்
இந்தப் பரிசோதனைகளில், புற்றுநோய் இருக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் குறித்து மலம் (கழிவு) சோதிக்கப்படுகிறது.
·பீக்கல் அக்கல்ட்(கழிவுசார் மறைபொருள்) இரத்தப் பரிசோதனை
·பீக்கல் இம்யூனோகெமிக்கல் (கழிவுசார் நோயெதிர்ப்பு வேதிப்பொருள்) பரிசோதனை
இந்தப் பரிசோதனைகள் குறைவாக சிதைவு உண்டாக்குபவை; இவற்றை எளிதாக மேற்கொள்ளலாம்; எனினும், இவை நீர்ச்சதைகளைக் கண்டறிவதற்கு குறைவான வாய்ப்பே உள்ளது.
·பீக்கல் அக்கல்ட்(கழிவுசார் மறைபொருள்) இரத்தப்
பரிசோதனை
ஒரு நுண்ணோக்கி வழியாகவே பார்க்கவியலும் இரத்தம் குறித்து மலத்தை (திடக் கழிவு) சோதிப்பதற்கான ஒரு பரிசோதனை.
மலத்தின் சிறிய மாதிரிகள் சிறப்பு அட்டைகள் மீது வைக்கப்பட்டு, அவை சோதிக்கப்படுவதற்காக மருத்துவரிடமோ பரிசோதனை நிலையத்திடமோ ஒப்படைக்கப்படுகின்றன.
·பீக்கல் இம்யூனோகெமிக்கல் (கழிவுசார் நோயெதிர்ப்பு
வேதிப்பொருள்) பரிசோதனை
இம்யூனோகெமிக்கல் ·பீக்கல் அக்கல்ட் இரத்தப் பரிசோதனை (ஐஎ·ப்ஓபிடீ) என்றும் அழைக்கப்படுகிற ·பீக்கல் இம்யூனோகெமிக்கல் பரிசோதனை (எ·ப்ஐடீ) என்பது, மலத்தில் மறைவாகவுள்ள (அக்கல்ட்) இரத்தத்தையும் கண்டறியக்கூடிய ஒரு புதிய வகை பரிசோதனை.
இந்தப் பரிசோதனை, இரத்த சிவப்பணுக்களில் உள்ள மனித ஹீமோகுளோபின் புரதத்தின் ஒரு பகுதிக்கு எதிர்வினையாற்றுகிறது.
எ·ப்ஐடீ பரிசோதனையானது அடிப்படையில் எ·ப்ஓபிடீ பரிசோதனை முறையிலேயே செய்யப்படுகிறது; எனினும், சிலருக்கு அது மேலும் எளிதாக அமையலாம்; ஏனெனில், அத்தகையவர்களுக்கு மருந்து அல்லது உணவுக் கட்டுப்பாடுகள் (வைட்டமின்கள் அல்லது உணவுகள் எ·ப்ஐடீ பரிசோதனையை பாதிப்பதில்லை) எதுவும் இருப்பதில்லை என்பதோடு மாதிரியை சேகரிப்பதற்கும் குறைந்த முயற்சியே தேவைப்படலாம்.
யாருக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங்
(நோய்ப்பாதிப்பு ஆய்வு) செய்யப்பட வேண்டும்?
நீர்ச்சதைகள் அல்லது ஆரம்ப கட்ட கடைப்பெருங்குடல் புற்றுநோய்:
-50 மற்றும் கூடுதல் வயதுடையவர்களுக்கு ஸ்கிரீனிங் செய்யப்பட வேண்டும்.
-கடைப்பெருங்குடல் புற்றுநோயிற்கு சராசரியை விட அதிகமான ஆபத்து கொண்டவர்கள் தாங்கள் 50 வயதுக்கு முன்பு ஸ்கிரீனிங் (நோய்ப்பாதிப்பு ஆய்வு) பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டுமா, எந்தெந்த பரிசோதனைகளை செய்துகொள்வது, ஒவ்வொரு பரிசோதனையிலும் உள்ள பலன்கள் மற்றும் ஆபத்துகள் யாவை, ஒரு காலகட்டத்தில் எத்தனை முறை சந்திப்புகளுக்குத் திட்டமிடுவது ஆகியவை குறித்து தங்கள் மருத்துவருடன் கலந்து பேசவேண்டும்.
சுமார் 75 வயதில், அல்லது அதிகபட்சமாக 85 வயதில், பெரும்பாலானவர்களுக்கு ஸ்கிரீனிங் செய்வதை நிறுத்திவிடலாம்.
ஒரு காலத்தில் எத்தனை முறை ஸ்கிரீனிங் (நோய்ப்பாதிப்பு
ஆய்வு) செய்யப்படவேண்டும்?
இது உங்களுக்கான கடைப்பெருங்குடல் புற்றுநோய் சார்ந்த ஆபத்தையும் எந்தப் பரிசோதனையை மேற்கொள்வது என்பதையும் பொறுத்தே அமைகிறது.
பெரும்பாலானவர்கள் இந்தத் திட்டங்களில் ஒன்றை (1) தெரிவுசெய்யலாம்:
-கொலோனோஸ்கோபி - ஒவ்வொரு 10 ஆண்டுகள்
-கம்ப்யூட்டட் டோமோகிரா·பி (சிடீசி) - ஒவ்வொரு 5 ஆண்டுகள்
-சிக்மாய்டோஸ்கோபி - ஒவ்வொரு 5 ஆண்டுகள்
-பேரியம் இனீமா - ஒவ்வொரு 5 ஆண்டுகள்
-இரத்தம் குறித்து மலத்தை பரிசோதித்தல் - ஆண்டுக்கு ஒரு முறை
உயரளவில் முன்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து கொண்டவர்களுக்கு மேலும் அடிக்கடி பரிசோதிக்கப்பட வேண்டும்; அவர்கள் கொலோனோஸ்கோபி பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.
www.magnahealthsolutions.com