நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள் யாவை?
ஆபத்துக் காரணிகள்
நோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எவ்வொரு விஷயமும் ஆபத்துக் காரணி எனப்படுகிறது.
ஓர் ஆபத்துக் காரணி கொண்டிருப்பதால் உங்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று அர்த்தமல்ல; அதேபோல், ஆபத்துக் காரணிகள் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் கூறவியலாது.
நுரையீரல் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள்
நுரையீரல் புற்றுநோய் ஆபத்துக் காரணிகளில் பின்வருபவையும் அடங்கும்:
தற்போது அல்லது கடந்த காலத்தில் சிகரெட், பீடி, பைப், அல்லது புகையிலை பிடித்தல்.
இரண்டாம்-நிலை புகைக்கு வெளிப்படுதல்.
மார்பகம் அல்லது நெஞ்சுப் பகுதிக்கு கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல்.
ஆஸ்பெஸ்டாஸ், ரேடான், குரோமியம், நிக்கல், ஆர்செனிக், புகைக்கரி அல்லது கரிக்கீல் ஆகியவற்றுக்கு வெளிப்படுதல்.
காற்று மாசுபாடு உள்ள இடத்தில் வசித்தல்.
புகைப் பிடித்தலுடன் பிற ஆபத்துக் காரணிகளும் சேர்ந்துகொள்ளும் போது நுரையீரல் புற்றுநோயிற்கான ஆபத்து அதிகரிக்கிறது.
புகைப்பிடித்தல் நுரையீரல் புற்றுநோயிற்கு மிகப்பெரிய ஆபத்துக் காரணியாக விளங்குகிறது
புகைப்பிடிக்காதவரை விட புகைப்பிடிப்பவருக்கு நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10 முதல் 30 மடங்கு அதிகம்.
பைப், புகையிலை புகைத்தல், புகையிலை மெல்லுதல் உள்ளிட்ட எல்லாவித புகையிலை மற்றும் புகைப் பழக்கங்களும் வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கு முக்கிய ஆபத்துக் காரணியாக உள்ளன.
புகைத்த சிகரெட்டுகளின் (அல்லது பீடிகளின் அல்லது பைப்களின்) எண்ணிக்கையும் புகைப் பழக்கம் உள்ள வருடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது நுரையீரல் புற்றுநோயிற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது.
புகைப் பழக்கத்தை கைவிட்ட பின்பும் பல வருடங்களுக்கு புற்றுநோய் ஆபத்து உயரளவில் உள்ளது; எனினும், கைவிட்ட 5 முதல் 10 ஆண்டு காலத்தில் அது புகைப்பிடிப்பவருக்கான ஆபத்தை விட குறைவாகவே இருக்கிறது.
முன்னாள் புகைப் பழக்கம் உடையவருக்கான நுரையீரல் புற்றுநோய் ஆபத்து ஒருபோதும் புகைப் பழக்கமில்லாதவரின் அளவுக்கு குறைவாக இருப்பதில்லை.
புகையிலையின் புகை எவ்வாறு புற்றுநோய் ஏற்படுத்துகிறது?
டிஎன்ஏ பொருள் தான் செல்லின் “வழிகாட்டல் கையேடு” ஆகும். அது இயல்பான செல் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது.
டிஎன்ஏ பொருள் தான் செல்லின் “வழிகாட்டல் கையேடு” ஆகும். அது
இயல்பான செல் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது.
டிஎன்ஏ சேதமடையும் போது, செல் கட்டுக்கடங்காமல் வளரத் தொடங்கி ஒரு புற்றுக்கட்டியை உருவாக்கலாம்.
இதற்குக் காரணம், புகையிலையில் உள்ள நஞ்சுகள் செல்லின் வழிகாட்டல்களை அழித்துவிடலாம் அல்லது மாற்றிவிடலாம்.
புகையிலையானது புற்றுநோயிற்கு வழிவகுக்கும் விதத்தில் டிஎன்ஏ-வை சேதப்படுத்தக்கூடும்.
சாதாரணமாக, நமது நோயெதிர்ப்பு மண்டலம் புற்றுநோய் தடுப்புக்கு உதவுகிறது. அது புற்றுக்கட்டிகளை தாக்கி அழிப்பதற்காக புற்று எதிர்ப்பிகளை அனுப்பிவைக்கிறது. எனினும், சிகரெட்டில் உள்ள நஞ்சுகள் புற்றுக்கட்டி எதிர்ப்பிகளை பலவீனப்படுத்தி விடுவதாக புதிய ஆராய்ச்சி காட்டுகிறது. இது நிகழும்போது, நிறுத்தவியலாதவாறு செல்கள் தொடர்ந்து வளர்கின்றன. ஆக, புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கி நமது உடலினால் அதை எதிர்க்கவியலாதவாறு உடலை தடுத்துவிடலாம்.
ஒருவருக்கு ஏற்கனவே புற்றுநோய் இருக்கும்போது புகையிலை புகைப்பது மேலும் அபாயகரமானது. புகையிலைப் புகை புற்றுக்கட்டி வளர்வதற்கு உதவுகிறது என புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. அது வேதிச்சிகிச்சையின் (ஒருவகை புற்றுநோய் சிகிச்சை) பலன்களை பாழாக்கலாம்.
புகையிலை புகையில் 7000 க்கும் மேற்பட்ட
இரசாயணங்கள் அடங்கிய ஒரு பயங்கர
கலவை உள்ளது. அவற்றுள் 100 வேதிகள்
நச்சுத்தன்மை கொண்டவை; சுமார் 70
வேதிகள் புற்றுநோய் உண்டாக்கக்கூடியவை
நுரையீரல் புற்றுநோய் கொண்டவர்களில் 80% முதல் 90% பேர் முன்னாள் அல்லது இன்னாள் புகைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர்
இரண்டாம்நிலை புகைக்கு வெளிப்படுதல்
புகைப்பிடிக்காதவர்கள் இரண்டாம்நிலை புகைக்கு வெளிப்படும்போது அது தன்விருப்பமில்லா புகைப்பிடித்தல் அல்லது மந்தநிலை புகைப்பிடித்தல் எனப்படுகிறது.
புகைப்பிடிப்பவர்களை போலவே, இரண்டாம்நிலை புகையை சுவாசிக்கும் புகைப்பிடிக்காதவர்களும் நிகோட்டின் மற்றும் பிற நச்சு வேதிகளை உட்கொள்கின்றனர்.
நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக இரண்டாம்நிலை புகைக்கு வெளிப்படுகிறீர்களோ அந்தளவுக்கு அதிகமாக உங்கள் உடலில் கொடிய வேதிகள் இருக்கும்.
இரண்டாம்நிலை புகையானது புகையிலையை எரிப்பதால் உருவாகும் 2 வடிவிலான புகைகளின் ஒரு கலவை. அவை:
பக்கவாட்டுப் புகை - பற்றவைத்த சிகரெட்டின் ஒரு
முனையிலிருந்து வெளிப்படும் புகை
மைய ஓட்டப் புகை - ஒரு புகைப்பிடிப்பாளர்
வெளிப்படுத்தும் புகை
புகையிலை மரணத்தை உண்டாக்கும்
“புகையிலை காரணமாக 6 வினாடிகளுக்கு 1 நபர் மரணிக்கிறார்; இது பெரிய வயதினர் மரணத்தில் 10 இல் 1 ஆகும்”
உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தகவல்படி,
புகையிலையால் ஆண்டுக்கு சுமார் 60,00,000 பேர் மரணிக்கின்றனர்; அதில், 50,00,000 க்கும் மேற்பட்டவர்கள் இன்னாள் மற்றும் முன்னாள் புகையிலை உபயோகிப்பவர்கள், மற்றும் 6,00,000 க்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம்நிலை புகைக்கு வெளிப்பட்ட புகைப்பிடிக்காதவர்கள்.
தற்போது புகையிலை உபயோகிப்பவர்களில் அதிகபட்சமாக பாதிப் பேர் நாளடைவில் புகையிலை-தொடர்பான ஒரு நோயால் மரணித்துவிடுவார்கள்
டபிள்யூஎச்ஓ மெய்த்தகவல் தாளின் படி,
கதிர்வீச்சு சிகிச்சைக்கு வெளிப்படுதல்
மார்பகம் அல்லது நெஞ்சுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கலாம்
வயது அதிகரிக்க, அதிகரிக்க நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது.
நுரையீரல் புற்றுநோய் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உண்டாகலாம் என்றபோதிலும், 40 வயதை விட குறைவானவர்களுக்கு அது வழக்கமாக ஏற்படுவதில்லை.
40 வயதுக்குப் பிறகு, நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதற்கான ஆபத்து ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது.
சிலருக்கு நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதற்கான மரபணு ஆபத்து அல்லது போக்கு உள்ளது. நுரையீரல் புற்றுநோய் உள்ள முதல்-நிலை உறவினர் (பெற்றோர், சகோதரர், சகோதரி) கொண்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதற்கான கூடுதல் ஆபத்து உள்ளது
வயது மற்றும் மரபணு ஆபத்துக் காரணிகள்
உருவாக்கம்:
www.magnahealthsolutions.com