பிப்ரவரி 4

உலக புற்றுநோய் தினம்

உலக புற்றுநோய் தினம்

முக்கியத்துவம் வாய்ந்த உலக புற்றுநோய் தினம், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் மற்றும் அதன் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றை ஊக்குவிக்கவும் பிப்ரவரி 4 ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. உலக புற்றுநோய் தினம் , உலக புற்றுநோய் பிரகடனத்தின் இலக்குகளை ஆதரிக்க, சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு சங்கத்தால்(UICC) 2008ல் நிறுவப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், புற்றுநோயால் ஏற்படும் உடல்நலக்குறைவு மற்றும் இறப்பை கணிசமாக குறைப்பதே உலக புற்றுநோய் தினத்தின் பிரதான குறிக்கோளாகும். உலக புற்றுநோய் தினம், புற்றுநோய் பற்றிய பொது அறிவை மேம்படுத்தவும் , மற்றும் நோய் பற்றிய தவறான கருத்துகளை நிராகரிக்கவும் கூட்டு குரல் எழுப்ப ஒரு வாய்பாக அமையும்.